புதுச்சேரியில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (மார்ச் 11) வெளியிட்டுள்ள தகவல்:

“புதுச்சேரி மாநிலத்தில் 1,201 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-20, காரைக்கால்-2 என 22 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஏனாம், மாஹேவில் தொற்று பாதிப்பு இல்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது. இதில், மருத்துவமனைகளில் 86 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 90 பேரும் என மொத்தம் 176 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 670 ஆகவும், இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது.

இன்று 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 108 (97.88 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் 11 ஆயிரத்து 564 சுகாதாரப் பணியாளர்கள், 3,872 முன்களப் பணியாளர்கள், 6,209 பொதுமக்கள் என 21 ஆயிரத்து 645 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே