எம்.எல்.ஏ கருணாஸ் மற்றும் திருவாடானை எம்எல்ஏ பவுன்ராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று..!!

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸ்-க்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, திண்டுக்கல் வீட்டில் கருணாஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதேபோல திருவாடானை எம்எல்ஏ பவுன்ராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்றால் ஆளுநர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில், 5,035 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 28 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே