கொரோனா தடுப்பூசி – நாடு முழுவதும் நாளை மீண்டும் ஒத்திகை..!!

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை இரண்டாம் சுற்று நாளை முதல் நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று பல்வேறு மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவி ஷீல்ட் ஆகிய தடுப்பு மருந்துகளை முதல்கட்டமாக 3 கோடி சுகாதாரத்துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான முதல்கட்ட ஒத்திகை கடந்த 2ம் தேதியன்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட ஒத்திகை நாளை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே