கொரோனா அதிகரிப்பு – நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை..!!

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(மார்ச் 23) கூடுகிறது.

கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றானது மீண்டும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், கரோனா பரவல், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே