தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (பிப்.,08) 40வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 495 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 8.25 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் இன்று (பிப்.,08) 464 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,42,261 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 254 ஆய்வகங்கள் (அரசு- 68 மற்றும் தனியார்-186) மூலமாக, இன்று மட்டும் 51,613 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 64 லட்சத்து 39 ஆயிரத்து 856 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று கொரோனா உறுதியானவர்களில், 269 பேர் ஆண்கள், 195 பேர் பெண்கள். 

கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,08,997 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,33,230 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 495 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 520 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 4 பேர் உயிரிழந்தனர்.

அதில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,387 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 4,354 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே