பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் பெற்றோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தோனியின் தந்தை பான் சிங், தாய் தேவகி தேவி ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்குத் தலைமை தாங்கி வருகிறார் தோனி. மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடுகிறது சிஎஸ்கே அணி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே