இரவு நேர ஊரடங்கு காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நிறுத்தப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியான அறிவிப்பில், ‘ சென்னையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக, சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

அதே போல முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக் கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவு மட்டுமே மின்சார ரயில்சேவை இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ரயில்சேவையை தவிர்த்து பொது தனியார் போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது சென்னையில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே