சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா..!

சென்னையில் பத்திரிக்கையாளர் இருவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திருவல்லிக்கேணியில் தங்கி பிரபல பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிந்து வந்த 24 வயது செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் தங்குமிடம் அமைந்துள்ள தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், தனியார் டிவி சேனலில் உதவி ஆசிரியராக பணிபுரியும் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரின் தந்தை சென்னை கடற்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார்.

இவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே