தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா..; 39 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இன்று மொத்தமாக 9,344 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த தமிழக கொரோனா பாதிப்பு 9,80,728 ​​​​​ ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது.

இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது.

ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,80,728 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 5,263 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 9,02,022 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 39 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 13,071 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 2,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,80,184 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே