#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 1) 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,882 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 6 லட்சத்து 16 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.

5 லட்சத்து 14 ஆயிரத்து 637 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

தமிழகத்தில் நேற்று வரை சுமார் 86 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,882 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94, 049 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 30,242பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன் மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,70,683 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,378பேர் ஆண்கள், 1,565பேர் பெண்கள். 90 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் 63பேர் உயிரிழந்தனர். 16பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,264ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2,852பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52,956 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே