தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 119 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,278-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,56,313- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 52,929- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.