#BREAKING : தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 15) 5860 பேருக்கு கொரோனா; 127 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரிப்பு – சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,105-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,641-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,72,251- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 54,213- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே