சென்னையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கினர்.
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் எல்லாம் தயாராகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தனர். அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டீவ் என ரிசல்ட் வந்த பின்னரே சென்னை வந்துள்ளனர்.
மார்ச் மாதமே தொடங்க வேண்டிய ஐபிஎல் கரோனா லாக்டவுன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என நினைத்த நிலையில், ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் முன் சென்னை மண்ணில் பயிற்சி எடுத்து இங்கிருந்து தான் செல்ல வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் தோனி ஆசைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இப்போது தோனி உள்ளிட்ட வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். 15 வீரர்கள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு லட்சுமிபதி பாலாஜி பயிற்சி அளிக்கிறார். ஆகஸ்ட் 20-ம் தேதி வரை பயிற்சி மேற்கொள்ளும் இவர்கள், ஆகஸ்ட் 22-ம் தேதி ஐக்கிய அமீரகத்துக்கு விமானம் மூலம் செல்ல உள்ளனர்.