தமிழகத்தில் புதிதாக 4,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.

புதிதாக 4,879 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,61,264 ஆக உயர்ந்துள்ளது.

42 நாள்களுக்குப் பிறகு 5 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 62 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் ஒரேநாளில் 5,165 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே