தஞ்சையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதனால் தஞ்சையில் தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக மார்ச் 8 ஆம் தேதி அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 58 மாணவிகள் ஒரு ஆசிரியர், 9 பெற்றோருக்கு கொரோனா உறுதியானது.

மார்ச் 13-ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மார்ச் 18-ஆம் தேதி மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் பள்ளியில் 21 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் தஞ்சை கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், 7 மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே