தமிழகத்தில் புதிதாக 1,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இன்று 70,765 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அவற்றில் 1,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,90,240 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 346 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,17,550 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடா்ந்து 49-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் இன்று 5 பேர் தனியாா் மருத்துவமனையிலும், 11 பேர் அரசு மருத்துவமனையிலும் என 16 பேர் உயிரிழந்துள்ளனா்.

இதனால் மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,793 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1398 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா்.

இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 7,67,659 ஆக உயா்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10788 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே