தமிழ்நாட்டில் இன்று (டிச.28) 1,005 பேருக்கு கொரோனா..; 11 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,15,175 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,15,175 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்பபடி தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 8,867 பேர் சிசிச்சை பெற்று வருகிறார்கள். இன்று கொரோனா தொற்றால் 11 பேர் பலியாகி உள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12069 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்இருந்து இன்று மட்டும் 1074 பேர் மீண்டனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 794228 பேர் மீண்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 285 பேர், கோவையில் 93பேர், செங்கல்பட்டில் 65 பேர், திருவள்ளூரில் 44 பேர், திருப்பூரில் 41 பேர், ஈரோட்டில் 33 பேர், காஞ்சிபுரத்தில் 38 பேர், சேலத்தில் 39 பேர், திருச்சியில் 23 பேர் மற்றும் மதுரையில் 20 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே