இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா..!!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்தை கடந்தது.

ஒரே நாளில் 2,99,988 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்தை தாண்டியது.

32.68 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,11,853 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 81.84 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.10 ஆகவும் உள்ளது.

மேலும், தற்போது 17.05 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 30) ஒரே நாளில் 19,45,299 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 28 கோடியே 83 லட்சத்து 37 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று (மே 1-ம் தேதி) காலை 10:10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 15 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 லட்சத்து 93 ஆயிரத்து 937 பேர் பலியாகினர். 12 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 329 பேர் மீண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே