தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் வீட்டில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 68,898 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்தம் 29 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என யாரையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் பராமதி மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் பணிபுரியும் 4 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சரத் பவாரின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கு இன்னும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என மாவட்ட சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.