மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவாவிற்கு கொரோனா

மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவாக்கு கொரோனா தொற்று உறுதி என தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவா கொரோனா தொற்று உறுதியானதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது குடும்பம் மற்றும் நெருங்கிய ஊழியர்களுடன் சேர்ந்து கொரோனா பரிசோதனை செய்தேன்.

அதில் ஆரம்ப அறிக்கையின்படி கொரோனா இருப்பது உறுதியானது .

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்” என்று பார்கவா இன்று மாலை தெரிவித்துள்ளார்.

பார்கவா முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சர்கள் குழுவில் ஆறாவது உறுப்பினராக உள்ளார். 

ஜூலை கடைசி வாரத்தில் சவுகானே நோய்த்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்து சிகிச்சையின் பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே