டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 1,300 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,427 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இதுவரை 1,30,587 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் டெல்லியில் இன்று 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,111 ஆக உயர்ந்துள்ளது.
தற்பொழுது, டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,729 ஆக உள்ளது.
டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது.