கரோனா ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட விதிகளை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், ‘கொரோனா காலத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக தமிழகத்தில் பதிவான 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தின் போது, பொது மக்கள் மீதும் போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

1,500 வழக்குகள் பதிவான நிலையில், சில வழக்குகளை தவற அனைத்தும் ரத்து செய்யப்படும்,’என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே