தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டது..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரியர் ரத்து செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசின் வழக்கறிஞர் விஜயநாராயணிடம் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கொரோனா நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் நீதிமன்றத்தால் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் எதுவும் சுகாதாரத் துறையிடம் இருக்கிறதா என அவர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த விஜயநாரயணன், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைப் பொறுத்தவரை நிலைமை முற்றிலுமாக கையை மீறி போய்விட்டது என்றார்.

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகளால் கணிக்க முடியவில்லை என்றார். 

இந்த அளவிலான தீவிர பரவலுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஒரு காரணம் இல்லை என்று கூறிய அவர், தேர்தல் நடத்தப்படாத பல மாநிலங்களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதாகக் கூறினார்.

இதையடுத்து இன்று பிற்பகல் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே