ஜல்லிக்கட்டை பார்வையிட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மதுரை வருகை..!!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி தனிவிமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளின் பகுதியாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா திருப்பரங்குன்றம் சாலையில் நடைபெற்று வருகிறது.

இதற்காக புதுதில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை தனி விமானத்தில் புறப்பட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மதுரை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்திலும், அவனியாபுரத்திலும் வரவேற்பளிக்கப்பட்டது.

தொடா்ந்து அவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றுள்ளார்கிறாா். காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்த ராகுல்காந்தி பொங்கல் விழாவைக் கொண்டாட மதுரை வருவதாக தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருந்தார்.

ராகுல்காந்தி வருகையையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே