அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்தனர்.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளின் பகுதியாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா திருப்பரங்குன்றம் சாலையில் நடைபெற்று வருகிறது.

இதற்காக புதுதில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை தனி விமானத்தில் புறப்பட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மதுரை வந்தடைந்தார்.

அவருக்கு விமான நிலையத்திலும், அவனியாபுரத்திலும் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு ராகுல்காந்தி அழைத்துவரப்பட்டார். 

அப்போது அங்கு ஏற்கனவே வந்திருந்த உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் கைக்குலுக்கிக் கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே