தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்..!!

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை அரியலூரில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு செய்தநிலையில், பெரம்பலூரிலும் ஆய்வை மேற்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,

கொரோனா தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

பெற்றோர்களின் கருத்தை அறிந்துதான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே