யுபிஎஸ்சி தேர்வில் வென்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு..!!

இந்திய குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான பூரண சுந்தரி, பால நாகேந்திரன் ஆகியோர் தேர்வில் வென்றதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் என கூறியுள்ளார். இவரின் மன உறுதியும், விடாமுயற்சியும் தான் அவர்களுடைய வெற்றிக்கு வித்திட்டது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே