பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!!

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வரும் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை 10 நாட்களுக்கு 691.20 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நீர் திறப்பால் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பாசனம், கால்நடை, பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே