சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் இன்று வீரர் ஒருவர் சக வீரர்கள் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 45வது பட்டாலியன் கேத்னார் முகாம் உள்ளது.
இந்த முகாமில் இன்று வீரர்களிடையே நடந்த பயங்கர மோதலில் 6 படைவீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
வீரர்களில் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து தனது சக வீரர்களை சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தார்.