செஸ் போட்டி : சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா பட்டம் வென்று அசத்தல்

மும்பையில் நடைபெற்ற இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா பட்டம் பெற்று அசத்தி இருக்கிறார்.

14 வயதான பிரக்ஞானந்தா, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றார். தொடக்கச்சுற்று முதலே முன்னிலை பெற்ற அவர், கடைசி மற்றும் 11-வது சுற்றில் ஜெர்மனியின் வாலெண்டின்னுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த போட்டி டிராவில் முடிந்தது.

பதினொரு சுற்றுகளின் முடிவில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.

இவர் ஏற்கனவே 8 வயது மற்றும் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் செஸ் போட்டிகளிலும் உலகச் சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே