நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை பகுதியாக ரத்து..!!

சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை மூலம் பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்ட்ரல்-கூடூர், எளாவூர்-கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து பகல் 12:40-க்கு சூலூர்ப்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயங்கும்.

சென்ட்ரலில் இருந்து மதியம் 02:35-க்கு சூலூர்ப்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயங்கும். சூலூர்ப்பேட்டையிலிருந்து மதியம் 03:10-க்கு சென்ட்ரல் வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும்.

சூலூர்ப்பேட்டையிலிருந்து மலை 05:15-க்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே