சென்னை – மதுரை தேஜஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்..!!

தேஜஸ் விரைவு ரயில் நேரத்தை மாற்றியமைத்து ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் – மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தற்போது சென்னையிலிருந்து வியாழக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும்.

தற்போது இந்த ரயில் காலை 6:00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படுவதால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பயணிகள் இந்த ரயிலை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

பயணிகளின் இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து புறப்படும் நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அக் 13 முதல் வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.50 மணிக்கு மதுரை சென்றடையும்.

இந்த ரயில் திருச்சியில் இருந்து முற்பகல் 10.35 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து முற்பகல் 11.55 மணிக்கும் புறப்படும்படி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து புறப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே