சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது.

இதன் நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும்.

இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.

தற்போது தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் சரியாக 12 மணியளவில் வெளியேற்று வழிகள் மூலமாக உபரி நீர் 1,000 கன அடி திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக குன்றத்தூர், நத்தம், காவலூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம், வழுதியம்பேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

அதேபோன்று அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே