BREAKING NEWS: அரபிக்கடலில் உருவான புயலுக்கு “மஹா” என பெயரிடப்பட்டுள்ளது

அரபிக்கடலில் உருவான புயலுக்கு ‘மகா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே குமரி கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது, தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது “மஹா” புயல் என பெயர் சூட்டி புதிதாக உருவாகி இருக்கிறது.

லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள “மஹா” புயல் நாளை தீவிர புயலாக மாறும் எனவும், லட்சத்தீவில் இருந்து 25 கி.மீ வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மஹா” புயலால் காற்றின் வேகம் 95 கி.மீட்டரில் இருந்து 110 கி.மீட்டராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரபிக்கடலில் க்யார் புயல் உருவாகியுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக “மஹா” புயல் உருவாகியுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீட்டர் தூரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் “மஹா” புயல் மையம் கொண்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே