Breaking News: வேதியியலுக்கான நோபல் பரிசு – மூன்று பேருக்கு அறிவிப்பு

2019ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு ஜான் பி.குட்இனஃப், எம்.ஸ்டான்லி ஹிட்டிங்ஹம் மற்றும் அகிரா யோஷினோ ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பொருளாதாரம், அமைதி, இயற்பியல், மருத்துவம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஸ்வீடிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு சார்பாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

2019-ம் ஆண்டு, நோபல் பரிசு பெறுபவர்களுக்கான விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத்துறை மற்றும் இயற்பியலுக்கான பிரிவில் நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மேம்படுத்த லித்தியம் – அயன் பேட்டரிகளை கண்டுபிடித்தற்காக ஜான் பி.குட்இனஃப், எம்.ஸ்டான்லி ஹிட்டிங்ஹம் மற்றும் அகிரா யோஷினோ ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே