BREAKING NEWS : போதுமான கூட்டம் வராததால் பிகில் பிற்பகல் காட்சி ரத்து – விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

பிகில் திரைப்படத்தைப் பார்க்க 4 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால், சென்னை தேவி திரையரங்கின் ஒரு திரையில் அப்படத்தின் மதிய காட்சி ரத்து செய்யப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் உள்ள தேவி பாரடைஸ் அரங்கில் 3.15 மணிக்கு பிகில் திரையிடப்படுவதாக இருந்தது.

ஆனால் 4 இருக்கைகள் மட்டுமே முன் பதிவாகி இருந்ததால் அந்த அரங்கில் பிகில் காட்சி ரத்து செய்யப்பட்டது.

டிக்கெட் வாங்கிய 4 பேரும், அதே வளாகத்தில் உள்ள தேவி அரங்கில் பிகில் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

குறைந்தபட்சம் 20 பேர் இருந்தால் மட்டுமே காட்சி திரையிடப்படும் என திரையரங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் படம் வெளியாகி ஏழாவது நாளிலேயே பெரிய நடிகரின் படத்திற்கு இதுபோன்ற நிலை சமீபத்தில் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே