BREAKING NEWS : பிஎஸ்என்எல்-க்கு 4ஜி உரிமம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினகங்களாக டிவிட்டரில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீதான தங்களது அன்பை டிரெண்டாக்கி வெளிப்படுத்தி வந்தனர்.

மற்ற நிறுவனங்களை போன்று தங்களது போட்டிக்கும், லாபத்திற்கும் ஏற்றவாறு மாற்றங்களை மேற்கொள்ளாமல் வாடிக்கையாளர்களுக்காக செயல்ப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் மீது தங்களது அன்பை மொத்தமாக கொட்டி தீர்த்து வருகின்றனர்.  

இந்த நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி தனது 4ஜி சேவையை துவங்க இது சரியான நேரம் என்றும் வர்த்தக்க வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு ஏற்ப, நான்காம் தலைமுறை அலைக்கற்றை (4G) உரிமத்தை மத்திய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிக்க மத்திய அமைச்சரவையில் அனுமதி கிடைத்திருக்கிறது.

இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே