சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 1,675 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் முதன்முறையாக ஒரேநாளில் 3 ஆயிரத்தைத் தாண்டி 3,509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,834 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக
- மதுரையில் 203 பேருக்கும்,
- செங்கல்பட்டில் 191 பேருக்கும்,
- திருவள்ளூரில் 170 பேருக்கும்,
- வேலூரில் 168 பேருக்கும்,
- ராமநாதபுரத்தில் 140 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.