தமிழகத்தில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 74,622ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41-ஆயிரத்தை கடந்தது.
தமிழகத்தில் இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,956 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,690-ஆக அதிகரித்துள்ளது.
தமிழக அளவில் கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் முதன்முறையாக நேற்று 3,500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து இன்று 2ஆவது நாளாகவும் அதே அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்குக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74,622ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரேநாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 957ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஐ தாண்டியே பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.