தமிழகத்தில் இன்று புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,267 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக தஞ்சாவூரில் 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 103. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 283.

உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு: 1,204

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 15

குணமடைந்தோர் எண்ணிக்கை: 283

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே