#BREAKING : தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 06) 5684 பேருக்கு கொரோனா; 110 பேர் பலி

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,684 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் மட்டும் 1,091 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,79,141 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய செய்திக் குறிப்பில் 110 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,459 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மேலும் 6,272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே