சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டாக மாறிவருகிறது சென்னை. தினமும் அங்கு நூற்றுக்கணக்கான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று சென்னையில் மட்டும் 559 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்தது.
இதனால் அங்குத் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமானது மிகக் குறைவாக இருந்து வந்த நிலையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த 22 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.