#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 17) 4,538 பேர் கொரோனாவால் பாதிப்பு; 79 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று (ஜூலை 17) புதிதாக 4,538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,60,907 ஆகவும், பலி எண்ணிக்கை 2,315 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,463 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 75 பேர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 109 ஆய்வகங்கள் (அரசு-55 மற்றும் தனியார் 54) மூலமாக, இன்று மட்டும் 48,669 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதனுடன் சேர்த்து, இதுவரை 18 லட்சத்து 31 ஆயிரத்து 304 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,755 பேர் ஆண்கள், 1,783 பேர் பெண்கள்.

கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 98,063 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 62,821 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 3,391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 79 பேர் உயிரிழந்தனர்.

அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 56 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,315 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 47,782 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே