#BREAKING : தமிழகத்தில் இன்று 1,458 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,458 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,458 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,423. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 35.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மேலும் 19 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று ஒரேநாளில் 633 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,395 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 7 ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய தினம் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே