தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
இந்த தகவல்களின் அடிப்படையில் “தமிழகத்தில் புதிதாக 1,438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஓரே நாளில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 232 ஆக உயர்வு. இதுவரை 15,762 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்”.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 1,116 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக ஆயிரத்திற்கும் மேல் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.