நித்தியானந்தாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்

சாமியார் நித்தியானந்தாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க சிபிஐ மற்றும் இன்டர்போல் அலுவலகத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

பல்வேறு வழக்குகளில் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

எங்கு உள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளதால், அவரது இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் கர்நாடகா போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கக் கோரி, டெல்லி சிபிஐ – இன்டர்போல் அலுவலகத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

நித்தியானந்தாவை கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் விதித்த கெடு நிறைவடைந்த நிலையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் கேட்டு கர்நாடக போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே