குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை சேர்ந்த பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவைச் சேர்ந்த பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் கோலமிட்டனர்.