அரசு சிலைக்குத் தடை போட்டதால் விநாயகர் வேடம் போட்டு ஊர்வலம் போக முயன்ற பா.ஜ.கவினர் கைது!

ஊர்வலமாக சென்ற பாஜக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

மேலும், பக்தர்கள், தனிமனித இடைவெளியை பயன்படுத்தி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தடையை மீறி சிறுவனை விநாயகர் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்து சென்ற பாஜக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே