நடிகை சுமலதாவின் இடுப்பில் கர்நாடகா மாநில முதலமைச்சர் எடியூரப்பா கை வைத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள அணையில் நீர் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வந்திருந்தார். அதேபோல் மாண்டியா தொகுதியை சேர்ந்த சுயேச்சை எம்.பி.யும் நடிகையுமான சுமலதா வந்திருந்தார்.
இருவரும் சேர்ந்து காவிரி நீரில் பூக்களை தூவி அணையை திறந்தனர்.
பூ போட்ட பிறகு சுமலதா இடுப்பில் முதல்வர் எடியூரப்பா கை வைப்பது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ கர்நாடகா முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதளறங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.