தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கடிதம் அனுப்பியுள்ளார்.
பொது நுழைவுத்தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது, தேசிய தேர்வு முகமை மூலம் நுழைவுத்தேர்வு நடத்துவது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்.
மேலும், இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால் அதனை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என அக்கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.